Saturday, September 6, 2014

தெரியுமா உங்களுக்கு?

* மின்சார பல்பை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்!
* வாத்துகள் விடும் `க்வாக்…க்வாக்’ சத்தம் எதிரொலிப்பதில்லை. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை!
* உலகிலேயே மகிழ்ச்சிக்காக உடலுறவு கொள்வது இரண்டு உயிரினம் மட்டுமே! மனிதன் மற்றும் டால்பின்கள்!
* மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சும் வண்ணத்து பூச்சிகளுக்கு சுவையுணர்வு நரம்புகள் அதன் பாதத்தில் உள்ளன!
* உலகில் உள்ள அனைத்து பனிக் கரடிகளும் இடதுகை பழக்கம் உள்ளவையே!
* நமது உடம்பில் அதிக வலிமையான தசை நாக்கு!
* விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானை!
* கல்லறை என்பதை குறிக்கும் `சிமெட்ரி’ என்ற ஆங்கிலச் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது. கிரேக்க மொழியில் கொய்மெட்ரியன் என்பதற்கு தூங்குமிடம் என்று அர்த்தம்! இதுவே மருவி இப்படி ஆகிவிட்டது.
*மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும்.
* ஸ்ட்ராபரி பழங்களில் மட்டுமே விதைகள் பழத்திற்கு வெளியே முளைக்கின்றன.
*ஆனைக்கொய்யா (Avacado) விலேயே பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஒவ்வொரு 100 கிராமிலும் 167 கலோரிகள் உள்ளன.
*ஆகாயப்பரபில் இருந்து விழும் தூசு துணிக்கைகளால் பூமியின் எடை ஆண்டொன்றுக்கு 100 டன்களால் அதிகரிக்கின்றது.
*புவியீர்ப்பு விசைகாரணமாக பூமியில் உள்ள மலைகள் 15,000 மீட்டருக்கு மேல் உயரமாக இருப்பது சாத்தியப்படாது.
*விண்வெளியில் மேலதிகமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 530 கிலோ கிராம் மேலதிக எரிபொருள் தேவை.
*ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியை விட்டு இரண்டு அங்குலம் அப்பால் விலகிக் செல்கிறது.
*மனித உடலில் உள்ள குருதிக்குழாய்களை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அடுக்க முடிந்தால் அதனை 12,000 மைல்கள் நீளத்திற்கு நீட்ட முடியும்.
*பௌர்ணமி முழு நிலவில் பிரகாசம் அரை நிலவிலும் 9 மடங்கு அதிகம்.
*உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு முறையேனும் தொலைபேசியில் பேசியதில்லை
* பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. “கிளி மீன்கள்” என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம்.
* ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.
*உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள்.
*நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது.
* ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் “ஏரியன்” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்’ என்பதற்கு ராக்கெட் என்பது பொருள்.
* ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம்.
* பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது.
* நீர்க்கோழியின் ஆயுட்காலம்? – 50 ஆண்டுகள்.
* விமானம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள `ஓஹையோ’ மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. லெப்டினன்ட் ஜான் மேக்ரெடி என்பவர் விமானம் மூலம், கம்பளி பூச்சிகளை ஒழிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளை ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் தெளித்தார்.
* நத்தை தன் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் வந்த வழியை மறப்பதில்லை. எங்கு சென்றாலும் திரும்பவும் தன் பழைய இடத்துக்கே வந்து விடுகிறது. கிட்டத்தட்ட 15 கிராம் எடை கொண்ட நத்தைக்கு, தன்னை விட 30 மடங்கு கனமுள்ள பொருளை இழுத்து செல்லும் ஆற்றலும் உள்ளதாம்.
* இத்தாலியின் பைசா நகர சாய்ந்த கோபுரம் புவி ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுக்கும் உதவி உள்ளது. அதாவது அறிவியல் விஞ்ஞானியான கலிலியோ, இந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று பல பொருட்களை கீழே வீசி எறிந்து, பூமியின் ஈர்ப்பு சக்தியை உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்.
* பற்பசை என்று அழைக்கப்படும் `டூத் பேஸ்ட்’, டிப்பில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதற்கான `டிப்’பை லண்டனைச் சேர்ந்த, வாஷிங்டன் ஷெப்பீல்டு என்பவர் கண்டுபிடித்தார்…

No comments:

Post a Comment