Saturday, September 6, 2014

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – வீர வரலாறு

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக
போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க் கை வரலாறு மற்றும் சாதனைகளை விரி வாகக் காண்போம்.
இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போ ராட்ட வீரர், இந்தியதேசிய ராணு வத்தை உருவாக்கியவர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகி நாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக் கும் ஒன்பதாவது மகனாக, ஒருவங்காள இந் து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெ ற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக் கவராகவும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், தன்னுடைய ஆரம் பக் கல்வியை, கட்டாக்கிலு ள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆர ம்பப் பள்ளியில்” தொடங்கி னார். பின்னர், 1913ல் “கொ ல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வி யை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங் கினார். சிறுவயதிலிருந்தே விவே கானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித் தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “ கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல் லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியா விற்கு எதிரான கருத்துகளை சொ ன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்ப ட்டார். பின்னர், “ஸ்காட்டி ஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இள ங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன் னுடைய பெற்றோர்களின் விருப்ப த்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐசிஎஸ் தேர்வுக்குபடிக்க லண்டனுக்கு சென் றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவ து மாணவ னாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ்சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்தது என லாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏது மின்றி கூட்டத்தில்பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்க ள் பெண்கள் குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள்மீது நடத்தப்பட்ட இத்தா க்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ்சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்த து மட்டுமல்லாமல், லண்டனி ல் தன்னுடைய பணியை துற ந்து 1921 ஆம் ஆண்டு இந்தி யா திரும்பி வரவும் செய்தது.
திருமண வாழ்க்கை
பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோ வேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப் பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக் கு பயணம் செய்த நேதாஜி அவ ர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர் ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்ப ர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண் டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு
‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வே லை செய்ய கூடாது’ எனக் கருதி தன் னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந் திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி. ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடு படவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவி ற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர் த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடை ய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்த து.
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்ட சபைகளை கைப்பற் றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தி யும் அவருடைய ஆதரவா ளர்களும் எதிர்த்தனர். இத னால் காந்திக்கும், தாசுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு கட் சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சி யை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுய ராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையு ம் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயா ட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்தி க்கும், நேதா ஜி க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப் பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக் கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார். நேதா ஜி அவர்கள், தலைவரானதும் ரவீந் திரநாத் தாகூர் அழைத்து, அவருக் குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியா தைக்கூரிய தலைவர் என்பது பொரு ள்) என் ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போ ஸின் செல்வாக்கு உயர்ந்து வருவ தைக்கண்ட காந்தி, அவருக்கு எதி ராக நேருவையும், ராஜேந்திர பிர சாத்தையும் போட்டியிடுமாறு வற் புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந் தி, உண்ணாவிரதம் இருக்க தொட ங்கினார். இதனால், நேதாஜி அவர் கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளி யேறினார்.
‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறா ர்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங் கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘ இரண்டாம் உலக ப்போர் நடந்து கொண்டிருந்த மும்முரமான கால கட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜன வரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவே டம் அணிந் து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடை ந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தா னை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என நினைத்த நேதாஜி இந்து குஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாரா த விதமாக ஹிட்லரின் அழை ப்பு வரவே, அவரின் அழைப் பை ஏற்றுபின்னர் ஜெர்மனியி லுள்ள மாஸ்கோவை அடை ந்த அவர், இந்திய சுதந்திரத் தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடி னார்.
சுதந்திர இந்திய ராணுவம்
1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப் பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வா னொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல் லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப் போர் பற்றிய செய்திகளை யும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற் சி அளித்து அதனை தலைமை யேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரி ல் நடந்த மா நாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடன த்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத் தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மா வில் இருந்த படியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொ ண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரண ங்களால் தோல்வியைத் தழுவி பின் வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வா னொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர் வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கை யுடன் இருங்கள், இந்தியாவை நிரந் தரமாக அடிமைத் தலத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக் கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன் று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
போஸ் மரணம் குறித்த சர்ச்சை
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமா னம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந் து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
“எனக்கு ரத்தம் கொடுங்க ள், உங்களுக்கு சுதந்திரத் தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சி நாயகன் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் பாரதநாட்டை அடிமை படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதி யாகபோராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய் தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்து ப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடை வை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென் றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தி யாவிற்காக தன்னையே அற்பணித்து கொ ண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்திய னின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment