Friday, October 3, 2014

பழிவாங்கும் தீவு!!

பழிவாங்கும் தீவு!!



gayola_island_004இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா தீவு.
நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம்.
இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர்.
1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை விரிப்பில் சுருட்டப்பட்டு இறந்து கிடந்தார் . சிறிது நேரம் கழித்து அவரின் மனைவி அருகில் உள்ள கடலில் மூழ்கி இறந்தார்.
இதற்கு அடுத்து இந்த தீவை வாங்கிய ஜேர்மன் ஓட்டோ க்ருன்பக் தீவின் வில்லாவில் வசிக்கும் போது மாரடைப்பால் இறந்தார்.
அடுத்த உரிமையாளர் மிகப்பெரிய தொழில் அதிபர் மௌரிசே-ய்வேஸ் சாண்டோஸ் . இவர் பைத்தியம் பிடித்து மனநல காப்பகத்தில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு பிறகு இதை வாங்கியவர் ஒரு ஜேர்மன் இரும்பு தொழிற்சாலை அதிபர் . இதை வாங்கியவுடன் அவரின் நடவடிக்கைகள் மாறியது . அவரின் மொத்த சொத்தும் அவரின் இந்த மாற்றத்தால் அழிந்தது.
அடுத்து வாங்கிய ஜியானி அக்னெல்லி , அவரின் பெரும்பாலான உறவினர்களை மரணத்தின் பிடியில் கொடுத்தார் . பிறகு பால் கெட்டி என்பவர் வாங்கினார் . வாங்கிய பின் அவரின் பேரனை யாரோ கடத்தினார்கள்.
மீப கால நிகழ்வு 2009 இல் நடந்தது . பிரான்கோ அம்ப்ரோசியா மட்டும் அவரின் மனைவி ஜியோவன்னா சாக்கோ இருவரும் இந்த தீவின் எதிரில் உள்ள ஒரு வில்லாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கொலை செய்யபட்டனர்.
இவை அனைத்தும் தற்செயலாக கூட இருக்கலாம்! இருந்தாலும் இந்த தீவின் அருகில் இருக்கும் மக்களுக்கு உண்மை தெரியும் வரையில் , இவை அனைத்தும் புரியாத ஒரு புதிராகவே இருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை

No comments:

Post a Comment