Wednesday, September 17, 2014

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 
உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.
 
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
 
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்
 
அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.
 
புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Saturday, September 13, 2014

கிழமையும் விளக்கமும்




undefinedSUNDAY  = கதிரவனுக்கு முதன்மை இடமளித்தால் SUNDAY என்றாயிட்டு.

MONDAY = சந்திரனின் நாளாக இரண்டாம் நாள் MONDAY

TUESDAY= ஸ்காண்டி நேவியர்களின் கடவுளாகிய TIW  என்பதே Tuesday ஆகும்.

WEDNESDAY= ஸ்காண்டி நேவியர்களின் அரசன் Wodin என்பதே WEDNESDAY.

THURSDAY=   இடி கடவுளின் (TOR) பெயரையே THURSDAY ஆகும்.

FRIDAY=      நேவியர்களின் அரசி FRIGG அவர்களின் பெயர்ப்படி  வந்ததாகும்.

SATURDAY=  ரோமானியர்களின் கடவுள் (SATURN) பெயரையே இறுதிநாளுக்கு வைத்தனர்.

புயல்கள் எப்படி உருவாகின்றன


நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆவ் என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து  பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.

செய்கைகோள்கள் அனுப்பிய தரவுகளை கொண்டு வரைந்த தோற்றம்.
புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.



வெப்பமண்ட்ல புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்  வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. கடல் மட்டத்தில் இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ல காற்று குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம் குறைக்கிறது.
அதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள் முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும்  காற்றும் சூடாகிறது. சூடான  காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை பிடிக்கிறது. இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில் உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு  கடலின் சூட்டாலும் அதன் பரப்பில் ஆவியாகும் நீராலும் மேககத்திரளும் காற்றின் சுழற்சியும் பெருகுகிறது
புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள் வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும் சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி  தன் அச்சு மேல் சுழல்வதே  காரணம்.
ஒரு உருமு மேகம். “வெப்பமண்டல புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன
உருமு மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள்.  இது இடியும் மின்னலும் கூடிய ஒரு வகை மேகம். இது  அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும் மேலான  உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும். இரு ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக திரளாகவோ இருக்கும்.
இந்த சூறாவளி அமைப்பு  வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன் சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும் இருக்கும்.  உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ் நோக்கி பாயும்.
வெப்பமண்டல சூறாவளியின் குறுக்குவெட்டு தோற்றம்.

வெப்பமண்டல சூறாவளியை குறுக்காக வெட்ட இயலுமானால், அது இப்படித்தான் இருக்கும். அந்த சிறிய சிவப்பு அம்பு, ஈரமான காற்று கடலின் பரப்பில் இருந்து மேலெழுந்து புயலின் கணணை சுற்றி மேக கற்றைகளை உருவாக்குவதை சுட்டுகிறது. நீல நிற அம்பு, குளிர்ந்த வரண்ட காற்று அதன் கண்னில் அந்த மேக கற்றைகளின் ஊடே இறங்குவதை சுட்டுகிறது. பெரிய சிவப்பு அம்புகளோ, மேல் எழும்புகின்ற மேக கற்றைகளின் சுழற்சியை சுட்டுகிறது
சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கப்படும். அதுவே  74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் எனப்படும்.
வெப்ப மண்டல புயல்கள் வழமையாக நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல் ஊட்டப்படுவது இல்லை. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து முற்றிலும் மடிவதற்குள்,  பல அங்குல மழையை கொட்டுவதோடு, காற்றினால் விளையும் சேதங்களுக்கு காரணமாகிறது.
வெப்ப மண்டல புயல்களின் வகைப்பாடுகள்

நாசா வடிவமைத்து அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால் இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள்  தரைமட்டத்தில் இருந்து 23,000 மலை உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு உள்ளன. இக்கோள்கள், வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது தோன்றும் என கணித்து சொல்வதால் பல உயிர்களை காக்க முடிகிறது.
http://spaceplace.nasa.gov/hurricanes/


முத்து உருவாகுவது எப்படி



Image result for முத்து imagesஇயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?




முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.



கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Image result for முத்து images



சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.





சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.




அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம்.






கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.



அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.


 இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் எறும்புகள்: ஆய்வறிக்கை!


பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செம்மர எறும்புகள் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதாக துய்ஸ்பர்க் சென் பல்கலைகழக புவியியல் நிபுணர் உல்ரிச் ஸ்கர்பர் தெரிவித்துள்ளார்.




உல்ரிச்சும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கு ஜேர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு மலைப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.



அருகாமையில் ஏற்படும் சிறு நிலநடுக்கத்தின் போது இந்த எறும்புகள் விநோதமாக நடந்து கொள்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உல்ரிச் ஸ்கர்பர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அப்ருசோ பகுதிக்கு சென்றிருந்தார். எல் அகுய்லா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் உல்ரிச் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது புவியியல் கோட்டு பகுதியில் எறும்புக் கூடுகள் இருப்பதை கண்டார்.
ஆய்வாளர் உல்ரிச் இஸ்தான்புல் பகுதிக்கு சென்று இந்த ஆய்வை தொடரத் திட்டமிட்டுள்ளார். மிக விரைவில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். தமது ஆய்வு துவக்க நிலையிலேயே இருப்பதாக கூறும் உல்ரிச் வருங்காலத்தில் மனித உயிர்களை காக்கும் வகையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் சிற்றினமாக எறும்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சங்குகள் பற்றி தொடரும் ஆராய்ச்சிகள்

Image result for சங்குகள் images
மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.



கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.




உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.




சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், நுண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.



முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
Image result for சங்குகள் imagesபிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.




அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்?

Image result for cat imagesமுலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.
புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், “எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது” , “எனது பூனை கேக் சாப்பிடுகின்றது” என்கின்றார்களே… இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில்,


அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உறுப்பு இல்லாத உயிரினங்கள் எவை?

Image result for வண்ணத்துப்புச்சி imagesImage result for வண்ணத்துப்புச்சி imagesImage result for வண்ணத்துப்புச்சி images
இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள்.


ஆனால் எமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக காணக்கூடிய சில உயிரினங்கள் சிலவற்றுக்கு உறுப்புக்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?? அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

*வயிறு இல்லாத உயிரினம் ஈசல்

*தலை இல்லாத உயிரினம் நண்டு

*வாய் இல்லாத உயிரினம் வண்ணத்துப்புச்சி

*காது இல்லாத உயிரினம் பாம்பு

Thursday, September 11, 2014

புகையிலை ஒரு தாவரம் தான்!
ஆனால் அது மனித உயிரை அழிக்கும் நச்சுத் தாவரம்!


 
Image result for smoking imagesபுகையிலையில் 'நிக்கோட்டின்' எனும் விஷத்தன்மை உள்ளது. சிகரெட், பீடி, முதலானவற்றைப் புகைக்கும்போது அது கார்பன்டை ஆக்ஸைடுடன் கலந்து புகைப்பவனுக்கு நுரையீரலில் கான்சரை (புற்று நோயை) தருகிறது. புகைக்காதவர் அவன் பக்கத்தில் இருந்தால் அவனுக்கும் புற்றுநோய் வருகிறது. அத்தனை கொடியது 'நிக்கோட்டின்' என்று கூறுகிறார் அமொ¢க்க டாக்டர்.

புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் 18 நிமிட மனித ஆயுளை குறைத்துவிடுகிறது!

ஒரு பூனையை சாகடிக்க ஒரு துளி நிக்கோட்டின் போதும்!

ஒரு நாயை சாகடிக்க இரண்டு துளி நிக்கோட்டின் போதும்!

பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை புற்றுநோய் முதலான பல கொடும் நோய்களுக்கு காரணம் என்கிறார் அமொ¢க்க டாக்டர் ஸ்பென்ஸ். உடலுக்கு நோய் தவிர எந்த ஊட்டமும் இதில் இல்லை. வாயும் துர்நாற்றம் அடிக்கிறது.

இந்தக் கொடுமையைத் தடுக்க முதல் கட்டமாக பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. புகையிலை கொண்டு செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப்படும்

பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 40 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 2.50 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.Image result for papaya images
பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
மத்திய மற்றும் தென் அமொ¢க்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.
அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.
எப்படி நல்ல பப்பாளி பழத்தை தேர்ந்தெடுப்பது?


1. விரலால் அழுத்தி பார்க்கும்போது குழி விழாமலும். மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
2. நன்கு பழுத்த பப்பாளியை விட முக்கால் பாகம் பழுத்த பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.
3. தேவைப்பட்டால் பப்பாளி துண்டுகளுடன் சர்க்கரை, சாட்மசாலா அல்லது லெமன் சூஸ் சேர்த்து சாப்பிடலாம்.
4. குளிர் சாதன பெட்டிகளில் வைத்து சாப்பிடாமல் அவ்வப்போது பழுத்தவுடன் சாப்பிட்டால் பப்பாளி மிக சுவையாகவும் இருக்கும்.
பப்பாளி பழத்தை உபயோகித்து சுவையான மோர் தயா¡¢க்கலாம். ஒரு கப் தயிர், ஒரு கப் பழம் துண்டுகள், பாதி எலுமிச்சம் பழரசம், உப்பு, சர்க்கரை, தேன் மற்றும் மிளகு, புதினா, தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பப்பாளி மோர் தயா¡¢த்து பருகினால் மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது. குழந்தைகள் விரும்பி அருந்துவர்.
பப்பாளி பன்னீர் சாலட் செய்ய ஒரு கப் பன்னீர், வெள்ளா¢க்காய் அரை கப், கொட்டை இல்லாத மாதுளம் விழுதுகள் அரைகப், எலுமிச்சை ரசம் சோயா சாஸ், தேவைக்கேற்ப தேன், உப்பு, மிளகு ஆகியவைகளை கலந்து சாப்பிட்டால் சுவையோ சுவை. எந்த நோயும் நம்மை அண்டாது. பப்பாளி காயின் தோலை சீவி பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகா¢க்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீ¡¢ல் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொ¡¢யலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.



 
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்
இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலோ¢யா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்
மாதவிலக்குக் கோளாறுகளை சா¢ செய்கிறது .



சளித்தொல்லை நீங்க:
1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூ¢க்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
காது அடைப்பு, வலி நீங்க:
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.
குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எ¡¢ச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
           

Wednesday, September 10, 2014

வாழைப்பழம் மருத்துவ பயன்கள்


1.செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
7.மஞ்சள் வாழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.                                     




வாழைப்பழம் :- மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
வாழைப்பழம் மருத்துவ பயன்கள் 

1.செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 

7.மஞ்சள் வாழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.